ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர், காவலர் 2 பேர் காயம்

0 1937

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் ஒருவரும் காவல்துறையினர் இருவரும் காயமடைந்தனர்.

பயங்கரவாதிகளின் பதுங்கிடங்களை அடையாளம் காட்டுவதற்காகச் சிறையில் உள்ள லஸ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த சியா முஸ்தபாவை காவல்துறையினரும் ராணுவத்தினரும் படா துரியன் என்னுமிடத்துக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் அந்த வாகன அணி மீது துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறையினர் இருவரும், ராணுவ வீரர் ஒருவரும், காவல்துறையினரின் பிடியில் இருந்த சியா முஸ்தபாவும் காயமடைந்தனர்.

இதனிடையே, சோபியன் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது காவல் படையினர் பதிலடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மோதலில் அடையாளம் தெரியாத ஒருவர் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments