இலங்கைக் கடற்படை ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

0 2646

இலங்கைக் கடற்படையின் ரோந்து கப்பல் படகு மீது மோதியதில், கடலில் மூழ்கி  உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்தபோது அவர்களின் படகின் மீது இலங்கைக் கடற்படை ரோந்துக் கப்பல் மோதியதாகவும், இதில் கடலில் மூழ்கி மீனவர் ராஜ்கிரண் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

சுகந்தன், சேவியர் ஆகிய இரு மீனவர்கள் இலங்கைச் சிறையில் உள்ள நிலையில், மீனவர் ராஜ்கிரண் உடலைத் தேடிக் கண்டுபிடித்த இலங்கைக் கடற்படை இந்தியக் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்தது.

அவர்களிடம் இருந்து உடலைப் பெற்றுக்கொண்ட மீன்வளத்துறையினர் படகில் கோட்டைப்பட்டினத்துக்கு எடுத்துச் சென்று குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள், உறவினர்கள் மரியாதை செலுத்திய பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments