தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்!

0 3425

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகக் கன்னியாகுமரி, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நாளை சேலம், மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

திங்கட்கிழமை அன்று புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிகக் கன மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments