9 மாவட்ட மறைமுக ஊரக ஊராட்சித் தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

0 2736

நடந்து முடிந்த 9 மாவட்ட மறைமுக ஊரக ஊராட்சித் தேர்தல் முடிவுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அதன்படி 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளில் திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

73 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் திமுக 68 இடங்களிலும், அதிமுக, மதிமுக  தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 73 இடங்களுக்கு நடந்த ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தேர்தலில் திமுக 62 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் அதிமுக ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 2 இடத்திலும்  வெற்றி பெற்றனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments