கொலை வழக்கில் சிறையிலுள்ள கடலூர் திமுக எம்பி டி.ஆர்.வி.ரமேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

0 1998

கொலை வழக்கில் கடலூர் திமுக எம்பி டிஆர்வி ரமேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

முந்திரி தொழிற்சாலை ஊழியர் கோவிந்தராஜ் என்பவரின் மரணம் தொடர்பாக எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, மாவட்ட கூடுதல் முதன்மை நீதிபதி செந்தில்குமார், நாளைக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் விருத்தாசலம் கிளைச்சிறையில் உள்ள நடராஜன், அல்லா பிச்சை, கந்தவேல், வினோத், சுந்தராஜன் ஆகிய 5 பேரையும் இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments