கர்நாடகத்தில் பலத்த மழை பெய்ததால் ஒகேனக்கல்லில் ஒன்பதாயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு!

0 3113

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் ஒகேனக்கல்லில் ஒன்பதாயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்குக் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை ஒன்பதாயிரம் கன அடியாக இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், தமிழக எல்லைப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

இதனால் ஒகேனக்கல்லில் இன்று காலை நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துப் பாய்கிறது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments