கனமழை எதிரொலி ; குளம் போல தேங்கிய மழைநீரில் சிக்கி அரசுப்பேருந்து தத்தளிப்பு

0 3011
கனமழை எதிரொலி ; குளம் போல தேங்கிய மழைநீரில் சிக்கி அரசுப்பேருந்து தத்தளிப்பு

நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால் ரயில்வே சுரங்கப்பாலத்தில், குளம் போல் தேங்கியிருந்த மழைநீரில் சென்ற அரசுப்பேருந்து சிக்கிக்கொண்டது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக வள்ளியூர், நாங்குநேரி, பணகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வள்ளியூரில் உள்ள ரயில்வே சுரங்கப்பாலத்தில் அதிக அளவிலான மழைநீர் தேங்கி நின்றது.

அவ்வழியாக சென்ற அரசுப்பேருந்து, இயந்திர கோளாறு காரணமாக தண்ணீரில் சிக்கி தத்தளித்து நின்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments