வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல ரவுடியின் மனைவி... பதவியேற்பு விழாவில் வைத்தே கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்த போலீசார்!

0 5953

செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சியின் 9ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல ரவுடியின் மனைவியை பதவியேற்பு விழாவில் வைத்தே கஞ்சா கடத்தி விற்பனை செய்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

பிரபல ரவுடியான நெடுங்குன்றம் சூர்யா மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தனது மனைவி விஜயலட்சுமியை எதிர்த்து யாரும் போட்டியிடக்கூடாது எனவும், விஜயலட்சுமிக்கு ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவி கேட்டும் சிறையில் இருந்து கொண்டே சூர்யா மிரட்டியதாக கூறும் போலீசார், விஜயலட்சுமி கஞ்சா கடத்தி விற்பனை செய்வது தெரியவந்ததால் கைது செய்ததாக விளக்கமளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments