ரெய்ப்பூர் ரயில் நிலையத்தில் CRPF ஜவான்களின் காட்ரிஜ் பெட்டி தவறி விழுந்து வெடி விபத்து..!

0 3495

ரெய்ப்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை நடந்த வெடி விபத்தில் சிஆர்பிஎஃப் ஜவான்கள் ஆறு பேர் காயமடைந்தனர். சிஆர்பிஎஃப்-ன் 211 ஆவது பட்டாலியனை சேர்ந்த ஜவான்கள் சிறப்பு ரயில் மூலம் ஜம்முவுக்கு புறப்பட்டனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த வெடிமருந்து காட்ரிஜ் பாக்ஸ் ஒன்று தவறி விழுந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் 29 டெட்டனேட்டர்கள் வெடித்த தாகவும் அதை சுற்றி நின்ற ஜவான்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வெடி விபத்து ஏற்பட்ட தகவலை தொடர்ந்து மூத்த சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மருத்துவமனையில் சென்று ஜவான்களின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments