சொத்துக் குவிப்பு வழக்கு: சிறையில் இருந்து விடுதலையானார் சுதாகரன்

0 3798

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை நிறைவடைந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சுதாகர விடுதலையானார்.

2017 ஆண் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி சிறைக்கு சென்ற சுதாகரன் 2021 பிப்ரவரி 14 ஆம் தேதி விடுதலை ஆகவேண்டிய நிலையில் 10 கோடியே பத்து ஆயிரம் ரூபாய்  அபராதம் செலுத்த தவறிய காரணத்தால் ஒரு ஆண்டு கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்த வழக்கில் விசாரணை கைதியாக 123 நாட்கள் சிறையில் இருந்ததால், அதையும் கணக்கிட்டு முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என அவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments