ஆர்யன் கானுக்கு பல ஆண்டுகளாக போதை மருந்து பழக்கம் உள்ளது?நீதிமன்றத்தில் போதை தடுப்புப் பிரிவு வழக்கறிஞர் தகவல்

0 5338

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு பல வருடங்களாக போதை மருந்து பழக்கம் உண்டு என போதைத் தடுப்புப் பிரிவு மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆர்யன் கான் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செஷன்ஸ் கோர்ட்டில் நடக்கிறது. அப்போது, பல ஆண்டுகளாக போதை மருந்து பயன்படுத்துவதாக ஆர்யன் கான் அளித்த வாக்குமூலம் தங்களிடம் இருப்பதாக போதை தடுப்புப் பிரிவுக்காக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங்  தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் மேலும் 15 முதல் 20 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆர்யன் கானுக்கு போதைப் பொருள் கடத்தலிலும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என்ற அவர், ஆர்யன் கானுக்கு இந்த கட்டத்தில் ஜாமின் வழங்க கூடாது என்றும் வாதிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments