பிரான்சில் இருந்து 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன ; டிசம்பர், ஜனவரி மாதங்களில் மேலும் 6 விமானங்கள் வரவுள்ளதாக தகவல்

0 2611
3 ரபேல் விமானங்கள் பாரிஸிருந்து வந்து சேர்ந்தன

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன. ஏற்கனவே 26 ரபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், மேலும் 3 விமானங்களை டசால்ட் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. நடுவானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டு, இந்த விமானங்கள் குஜராத் மாநிலம் ஜாம் நகருக்கு வந்து சேர்ந்தன.

 டிசம்பர், ஜனவரி மாதங்களில் மேலும் 6 விமானங்கள் வரவுள்ளன. 36-வது ரஃபேல் விமானம் பல்வேறு சிறப்பம்சங்களுடன், கூடுதல் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments