குடும்ப பிரச்சனையால் இரண்டு குழந்தைகள் ஏரியில் தள்ளிக் கொலை.. விபரீத முடிவெடுத்த நபர் மருத்துவமனையில் அனுமதி..!

0 2894
குடும்ப பிரச்சனையால் இரண்டு குழந்தைகள் ஏரியில் தள்ளிக் கொலை

சென்னை ஆவடியில் குடும்பப் பிரச்சனையில் இரண்டு குழந்தைகளை ஏரியில் தள்ளிக் கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கொடூரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

கொள்ளுமேடு ஒண்டித் தெருவை சேர்ந்த கணேசன் - மாரியம்மாள் தம்பதிக்கு 6 மற்றும் 4 வயதில் 2 ஆண் குழந்தைகள் இருந்தனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணேசன், மனைவியின் நடத்தையிலும் சந்தேகம் கொண்டு தகராறு செய்து வந்தான் என்று கூறப்படுகிறது.

இதனால் மனைவி அவனைப் பிரிந்து சென்று சகோதரி வீட்டில் தங்கி இருந்தார். குழந்தைகளை அவருடன் அனுப்ப கணேசன் மறுத்துவிட்ட நிலையில், மாரியம்மாள் போலீசில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து குழந்தைகளோடு தலைமறைவான கணேசன், வெள்ளானூர் ஏரியில் இருவரையும் தள்ளிக் கொன்றுவிட்டு, தானும் குதித்துள்ளான்.

தண்ணீர் குறைவாக இருந்ததால் தப்பித்த கணேசன், கை நரம்புகளை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments