திடீரென மாயமான வாக்குப் பெட்டிக்கான சாவி… பூட்டை உடைத்த அதிகாரிகள்..!

0 3647

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது, சாவி மாயமானதால், வாக்கு பெட்டி உடைக்கப்பட்டது.

பரமக்குடி மற்றும் போகலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள் பரமக்குடி அரசு பெண்கள்  மேல்நிலைப்பள்ளியிலுள்ள மையத்தில் எண்ணப்பட்டு வருகின்றன அப்போது, போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தபால் ஓட்டுகள் பதிவான பெட்டிக்கான சாவி மாயமானதால், நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் ஓட்டு வைக்கப்பட்டிருந்த பெட்டி பூட்டு உடைக்கப்பட்டது.

அந்த பெட்டியில் மொத்தமாக 61 தபால் ஓட்டுக்கள் இருந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments