லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் - பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்..!

0 2930

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் நில அளவீடு செய்ய 3ஆயிரத்து 500ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையாளராக ஸ்ரீதேவி என்பவர்  பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாலாபுரத்தைச் சேர்ந்த  புவனேஸ்வரி என்பவர் தனக்கு சொந்தமான வீட்டுமனையை  நில அளவீடு செய்ய  ஸ்ரீதேவியை சில தினங்களுக்கு முன்பு அணுகியுள்ளார்.

அப்போது 3ஆயிரத்து 500 ரூபாய் தந்தால் நில அளவீடுக்கு வருவதாக ஸ்ரீதேவி கூறியுள்ளார்.  இதுதொடர்பாக  புவனேஷ்வரி  காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் புகார் அளித்தார். பின்னர் அவர்களின் ஆலோசனையின் படி ரசாயனம் தடவிய பணத்தை ஸ்ரீதேவியிடம் அளித்த போது அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments