தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு வழக்கு - சிபிஐ இயக்குனருக்கு மும்பை சைபர் பிரிவு போலீசார் சம்மன்..!

0 1945

முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு வழக்கை விசாரித்து வரும் மும்பை சைபர் பிரிவு போலீசார், சிபிஐ இயக்குனர் சபோத்குமார் ஜெய்ஸ்வாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

மஹாராஷ்டிராவில் உளவுத்துறை தலைவராக ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா பணியாற்றியபோது, போலீசார் இட மாற்றத்தில் ஊழல் நடந்ததாக தயரிக்கப்பட்ட அறிக்கை கசியவிட்டதாகவும், முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்களை முறைகேடாக பதிவு செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த சம்பவம் நடைபெற்றபோது மராட்டிய மாநில டிஜிபியாக சுபோத்குமார் பணியாற்றினார் என்ற அடிப்படையில், இந்த வழக்கை விசாரிக்கும் சைபர் பிரிவு போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும் வரும் 14-ஆம் தேதி அவர் ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments