தேசியக் கொடியை அவமதித்ததாக எஸ்.வி. சேகர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம்

0 1808
தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி சேகருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும் நடிகர் எஸ்.வி.சேகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments