மதுபோதையில் தகராறு... இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய ரவுடிகள்

0 3802

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் எதிரே மதுபோதையில் இரண்டு ரவுடிகள் ஒரு இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

டாஸ்மாக் அருகே சென்றுகொண்டிருந்த விநாயகம் என்ற இளைஞரிடம் மதுபோதையில் இரண்டு பேர் வீண் வம்பு இழுத்ததாக கூறப்படுகிறது. விநாயகம் அவர்களை தட்டிக்கேட்ட நிலையில், அதில் ஒருவர் விநாயகத்தை தள்ளிவிட்டு அடிக்க முயன்ற நிலையில், மற்றொருவர் பீர் பாட்டிலை எடுத்து விநாயகத்தை ஓட ஓட விரட்டி தாக்கினார்.

தாக்குதலில் ஈடுபட்டது மங்களாபுரத்தை சேர்ந்த நித்யவேல் மற்றும் அவனது கூட்டாளி என்பதும், அவன் மீது பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments