தொடர் மழை எதிரொலி - கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு..!

0 3511

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னைக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.

அதன் காரணமாக கடந்த வாரம் கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி 50 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கு விற்பனையான கத்திரிக்காய் 50 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்பனையான கேரட் 60 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்பனையான பீன்ஸ் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அவரைக்காய் 25 ரூபாயில் இருந்து 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 25 ரூபாயில் இருந்து 40 ரூபாய்க்கும், முள்ளங்கி 15 ரூபாயில் இருந்து 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments