வளர்ப்பு நாயை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த உரிமையாளர் கைது..!
கோவையில் வளர்ப்பு நாயை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். கீரநத்தம் - புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து நாய் ஒன்றை வளர்த்து வந்த நிலையில், அந்த நாய் இரவு நேரத்தில் ஊளையிட்டதால் பக்கத்து வீட்டாருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து வளர்ப்பு நாயை வீட்டின் அருகில் இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்து கம்பால் அடித்தார்.இதனை வீட்டின் மாடியில் இருந்து வீடியோ எடுத்த நபர் சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், அதனை பார்த்த கோவையைச் சேர்ந்த பிராணிகள் நல சங்க நிர்வாகி மினிவாசுதேவன் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து மாரிமுத்தை மிருக வதை தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments