பிரபல போதைப் பொருள் தரகர் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை..!

0 4110

மும்பை பாந்த்ரா பகுதியில் இம்தியாஸ் கத்ரி என்பவரின் வீட்டில் இன்று அதிகாலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

போதைப் பொருள் தரகரான இம்தியாஸ் மர்மமான முறையில் உயிர் நீத்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கிலும் தொடர்புடையவர் என்றும் . பாலிவுட்டில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்பவர் என்றும் கூறப்படுகிறது.

அண்மையில் மும்பை சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியை அதிகாரிகள் சோதனையிட்டு நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உள்பட 16 பேரை கைது செய்ததைத் தொடர்ந்து இந்த சோதனை  நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments