ஃபோர்டு கார் தொழிற்சாலைகளை வாங்க டாட்டா நிறுவனம் பேச்சு நடத்தி வருவதாகத் தகவல்

0 3623

குஜராத்திலும் சென்னையிலும் உள்ள போர்டு கார் தொழிற்சாலைகளை விலைக்கு வாங்க டாட்டா மோட்டார்ஸ் பேச்சு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள கார் தொழிற்சாலைகள் கடந்த பத்தாண்டுகளாக நட்டத்தில் இயங்குவதால் அவற்றை அடுத்த ஆண்டு மூடப்போவதாக போர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொழிலாளர்களின் நலன் காக்க போர்டு ஆலையைப் பிற நிறுவனங்கள் ஏற்று நடத்தும் வாய்ப்புகளைத் தமிழ்நாடு பரிசீலித்து வருகிறது. தமிழ்நாட்டில் டாட்டாவுக்கு மோட்டார் தொழிற்சாலை இல்லை, குஜராத்தில் போர்டு தொழிற்சாலையின் அருகில் டாட்டா மோட்டார் தொழிற்சாலை உள்ளது.

டாட்டா நிறுவனம் மின்சாரக் கார் உற்பத்தியில் கவனம் செலுத்தி வரும் நிலையில், போர்டு தொழிற்சாலைகளை வாங்கினால் அதற்கான திறன்களை அதிகரிக்கும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments