தனியார் நிறுவனம் முன் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு..!

0 10377

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தனியார் நிறுவனம் முன் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலத்தை சேர்ந்தவர் பரணிதரன் என்பவர் ஒசூர் சிப்காட் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனது இருசக்கரவாகனத்தை வழக்கம்போல நிறுத்தி விட்டு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட இளைஞன் ஒருவன் பரணிதரனின் இருசக்கரவாகனத்தை திருடி சென்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments