காரில் சென்றவர்கள் பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்..!
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். மார்ஷல் மற்றும் ஹூவர் கவுண்டிகளில் இரு கார்களில் சென்றவர்கள் வெள்ளத்தில் மூழ்கி காருக்குள்ளேயே உயிரிழந்தனர்.
மேலும் பல்வேறு வாகனங்களில் சிக்கித் தவித்த 20 பேரும், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் 80 பேரும் காப்பாற்றப்பட்டனர். அமெரிக்க தேசிய வானிலை சேவை மையம், அலபாமாவில் ஷெல்பி மற்றும் ஜெபர்சன் கவுண்டிகளுக்கு திடீர் வெள்ள அவசரநிலையை வெளியிட்டுள்ளது.
Comments