அப்பாவி மக்களைக் குறிவைத்துத் தாக்கும் வாடகைத் தீவிரவாதிகள்..!

0 2892

ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் சீர்குலைத்து படுகொலைகள் மூலம் வன்முறையை ஏற்படுத்த தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஏஜன்சிகள் வாடகைக்கு அமர்த்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. ஸ்ரீநகரில் அப்பாவி மக்களைக் குறிவைத்து அண்மையில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

நேற்று இரண்டு ஆசிரியர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். சிறிய ரக ஆயுதங்களுடன் தாக்குதலை நடத்தி விட்டு தீவிரவாதிகள் சாதாரணமாக மக்களிடையே கலந்து விடுகின்றனர்.

படித்து வேலை இல்லாத உள்ளூர் இளைஞர்கள் சிறிய அளவில் வருமானம் கிடைக்கும் என்பதால் இது போன்ற தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments