நாட்டின் பாதுகாப்பு,காவல் விவகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை

0 2020

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் அரவிந்குமார், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, சிஆர்பிஎப் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை தலைமை இயக்குனர்கள்.

உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீநகரில் பள்ளி ஒன்றில் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி ஆசிரியர்கள் 2 பேரை கொன்றுள்ள நிலையில், எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்கள் மற்றும் டிரோன் மூலமான தாக்குதலை முறியடிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments