ஸ்ரீநகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சுட்டுக்கொலை..!

0 2191

ஜம்மு காஷ்மீரில் பள்ளியில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.

இதனை அடுத்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். ஸ்ரீநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை மருந்துக் கடை உரிமையாளர் உள்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் இன்று கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments