லக்கிம்புர் வன்முறை- 8 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை...!

0 1822

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.

இன்று முதல் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், மற்றும் ஹிமா கோஹ்லி அமர்வு முன் இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. லக்கிம்புரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வாகன அணிவகுப்புக்கு விவசாயிகள் கருப்புக் கொடி காட்ட முயன்ற போது, அவரது மகன் அசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து நிகழ்ந்த வன்முறையில் அமைச்சரின் கார் ஓட்டுனர் உள்பட 4 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். மத்திய அமைச்சரின் மகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த போதும் இன்னும் அசிஷ் மிஸ்ராவை கைது செய்யவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments