20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்சர்கள்... சாதனை படைத்த ஹிட்மேன்..!

0 4012

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 400 சிக்சர்கள் விளாசி இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஐ.பி.எல்.தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக செவ்வாய்கிழமை நடைபெற்ற போட்டியில் ரோகித் ஷர்மா இந்த சாதனையை படைத்தார். இந்திய அணிக்காக 133 சிக்சர்கள், ஐபிஎல் தொடரில் 227 சிக்சர்கள் என 400 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரோகித் ஷர்மா.

ரோஹித்தை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் 350க்கு மேல் சிக்சர்களை டி20 போட்டிகளில் அடிக்கவில்லை. மொத்தமாக ஆயிரத்து 42 சிக்சர்கள் அடித்து, மேற்கு இந்திய தீவுகளை சேர்ந்த கிறிஸ் கெயில் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments