நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

0 2055
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்பிடிப்பு பகுதியான நீலகிரியில் பெய்து வரும் கனமழையால், 105 அடி மொத்த உயரம் கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. இந்த நிலையில், நீர்வரத்து வினாடிக்கு 4,600 கன அடி வீதமாக உள்ள நிலையில், அணையில் இருந்து கீழ்மதகுகள் வழியாக பவானி ஆற்றில் 2300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி வீதம் திறக்கப்படுகிறது. இதனால், பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகள் நோக்கி செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments