கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாண்டுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்..ஆர்வமுடன் வந்த முதலாம் ஆண்டு மாணவ,மாணவிகள்

0 4758

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்ற நிலையில், இன்று முதல் வகுப்புகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை மாநிலக் கல்லூரி, மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி, திருச்சி இந்திராகாந்தி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டன.

முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்த நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments