பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகள், ஜவுளித் தொழில் கடும் பாதிப்பு...!

0 3523

பஞ்சு விலையைக் குறைக்க மத்திய அரசுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், பன்னாட்டுச் சந்தையில் பஞ்சு விலை உயர்ந்துள்ளதையும், தமிழ்நாட்டில் நூற்பாலைகளிடம் இருந்த கையிருப்பு தீர்ந்துவிட்டதையும், அதிக விலை கொடுத்துப் பஞ்சு வாங்க வேண்டியுள்ள சூழல் ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நூற்பாலைகளின் உற்பத்திச் செலவு அதிகரித்து ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments