அனுமதியின்றி நடத்தி வந்த காப்பகம்...சிறார்களை கட்டிட வேலைக்கும், வயல் வேலைக்கும் பயன்படுத்திய கொடூரம்.! காப்பகத்திற்கு சீல்.!

0 5593

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அனுமதியின்றி குழந்தைகள் நல காப்பகம் நடத்தி வந்ததோடு, குழந்தைகளை கட்டட வேலைகளுக்கும், வயல் வேலைகளுக்கும் ஈடுபடுத்திய அரசுப் பள்ளி ஆசிரியரையும், அவரது கணவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

குடுமியான்மலை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் கலைமகளும், அவரது கணவர் ராஜேந்திரனும் சேர்ந்து ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகம் நடத்தி வந்துள்ளனர்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறார்கள் அங்கு தங்கியிருந்த சூழலில், குழந்தைகளை கட்டிட வேலைகளுக்கும், வயல் வேலைகளுக்கும் பயன்படுத்தியதாகவும், முறையாக உணவு வழங்காமல் துன்புறுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் குழந்தைகள் நல அலுவலர்கள் காப்பகத்தில் விசாரணை நடத்தியபோது, காப்பகம் நடத்துவதாக கூறி வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றுமோசடி செய்து வந்ததும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காப்பகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள், அங்கிருந்த குழந்தைகளை மீட்டு வெள்ளனூர் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments