உத்தரகாண்டில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 4 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு.. திடீரென ஏற்பட்ட பனிச்சரிவால் நேர்ந்த சோகம்

0 2262

உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி கடற்படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள திரிசூல சிகரத்தில் இந்திய கடற்படையை சோந்த 10 பேர் கொண்ட குழு, மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டது. கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்ட இந்த குழு, திரிசூல மலையில் ஏற முற்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக பனிச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம், இந்திய விமானப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை உதவியுடன் தேடுதல் பணி நடை பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments