ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் அமோனியா வாயு குழாயில் விரிசல் - பொது மக்கள் அவதி...!

0 2331

சென்னை காசிமேட்டில், ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதால், கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே மனோகர் என்பவருக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில், ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகளுக்கு தேவையான ஐஸ் கட்டிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அமோனியா வாயு குழாயில் விரிசல் ஏற்பட்டு கசிந்தது.

இதனால்,  காசிமேடு, புதுமணைக்குப்பம், பவர் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் உள்ள கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் குழாய் விரிசலை சரி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments