காந்தி ஜெயந்தியையொட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆளில்லா கடை திறப்பு, நேர்மை குறித்து விழிப்புணர்வு

0 2040

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, நேர்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ஆளில்லா கடை திறக்கப்பட்டது.

பாபநாசம் பேருந்து நிலையத்தில், ரோட்டரி சங்கம் சார்பில் 22வது ஆண்டாக இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டது. அங்கு வீட்டு உபயோகப் பொருட்கள், எழுது பொருட்கள், திண்பண்டங்கள் உள்ளிட்டவை அதன் விலையுடன் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்வமுடன் அங்கு வந்த மக்கள் பொருளை எடுத்துக்கொண்டு அதற்குரிய பணத்தை வைத்துவிட்டு சென்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments