இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக்கொண்டேன்- ஐ.நா.பொதுசபை தலைவர் அப்துல்லா ஷாஹித்

0 3832

உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களைப் போல தானும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக ஐ.நா.பொதுசபையின் தலைவர் அப்துல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார்.

76-ஆவது ஐ.நா.பொதுசபை கூட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பல நாடுகள் கோவிஷீல்ட் தடுப்பூசியை ஏன் ஏற்றுகொள்ளவில்லை என்று தெரியவில்லை எனக் கூறினார்.

இதுவரை 6.6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை சுமார் 100 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ள நிலையில், அப்துல்லா ஷாஹித்-ன் நாடான மாலத்தீவுக்கு கடந்த ஜனவரியில் இந்தியா 1 லட்சம் டோஸ்களை அனுப்பியிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments