விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் ; வழக்கை விமானப் படை விசாரணைக்கு மாற்றி கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவு

0 2467
வழக்கை விமானப் படை விசாரணைக்கு மாற்றி கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவு

விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கை விமானப் படை விசாரணைக்கு மாற்றி கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில், லெப்டினன்ட் அமிதேஷ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சிக்கு வந்த பெண் புகாரளித்தார். இதனை அடுத்து காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரால் கைதான அமிதேஷ், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் அமிதேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, இந்திய விமானப் படை சட்டத்தின்படி இந்த வழக்கை விமானப்படை விசாரணைக்கு மாற்றி நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து லெப்டினேல் அமித்தேஷ் விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments