4 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

0 2501
4 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் மருத்துவ சேவைகளை நாடு முழுவதும் கொண்டு செல்லவும், நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தானின் 4 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். ஜெய்ப்பூரில் பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்ப மையத்தையும் திறந்து வைத்தார். அதன் பின் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று உலகெங்கும் மருத்துவத்துறையில் ஏராளமான படிப்பினைகளைக் கற்றுத் தந்துள்ளதாகவும், ஒவ்வொரு நாடும் இந்தச் சிக்கலை அவரவர் வழிகளில் கையாண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவும் தனது வலிமையையும் தற்சார்பையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். நாட்டின் மருத்துவத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு புதிய நலவாழ்வுக் கொள்கையை உருவாக்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தில் இணையம் மூலம் நல்ல மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்தகங்களை அறிந்துகொள்ள முடிவதுடன், நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார். நாட்டில் 88 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதையும் மோடி சுட்டிக் காட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments