பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்பு

0 4317
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், அமித் ஷாவுடன் சந்திப்பு

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். அமரீந்தரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரிப் பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் சோனியாகாந்திக்குக் கடிதம் எழுதினர்.

அதையடுத்து செப்டம்பர் 19ஆம் நாள் அமரீந்தர் சிங் பதவி விலகினார். இருப்பினும் கட்சியில் இருந்து விலகுவது பற்றி அவர் இன்னும் அறிவிக்கவில்லை. புதிய கட்சி தொடங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில் இன்று டெல்லியில் அமித் ஷாவின் இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் அமரீந்தர் சிங் பாஜகவில் சேரக்கூடும் எனக் கூறப்படுகிறது. பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments