தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் ; சென்னை வானிலை ஆய்வு மையம்

0 4007
தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காராணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், தருமபுரி, நாமக்கலில் கனமழையும், நாளைய தினம் நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

1-ந் தேதி முதல் 3-ந் தேதிவரை நீலகிரி, கோவை, குமரி உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments