தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லையில் கனமழை பெய்யக்கூடும் ; வானிலை ஆய்வு மையம்

0 2422
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லையில் கனமழை பெய்யக்கூடும்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை, குமரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 30-ந் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

வடமேற்கு வங்கக் கடலில் இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments