வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்காணிக்க தனிப்பிரிவு: தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2539

வெளிநாட்டினரின் நடமாட்டத்தை  கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப்பிரிவு ஏற்படுத்த தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசா காலம் முடிந்தும் இந்தியாவிலேயே தங்கி குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைதானவர்கள், ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு ஆணையிட்டுள்ளது.

சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 13 ஆயிரத்து 289 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக டிஜிபி அறிக்கை அளித்திருந்தார்.

இதை பதிவு செய்த நீதிபதி, சட்டவிரோதமாக தங்கி குற்றச்செயலில்  ஈடுபடுவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், இதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments