சிறுநீரகங்கள் செயலிழந்த சிறுமி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி... நேரில் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சிகிச்சைப்பெற்று வரும் சேலம் சிறுமியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார்.
உயர் மருத்துவ சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள சிறுமி ஜனனி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவரிடம் நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர், தைரியமாக இருக்குமாறு நம்பிக்கையூட்டினார்.
மேலும் சிறுமிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியான ஜனனியை ஏற்கனவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதலமைச்சர், தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
Comments