அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 16204

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், நெல்லை, குமரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளைய தினம் தேனி, திண்டுக்கலில் மிக கனமழையும், தென்காசி, குமரி, நீலகிரி, கோவையில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்  நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், அதேபோன்று கேரளா, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலுக்கும் மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments