ஸ்டார்மிங் ஆப்பரேஷன் மூலம், தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 325 ரவுடிகள் கைது

0 3157

ஸ்டார்மிங் ஆப்பரேஷன் மூலம், தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த  21,592 ரௌடிகளின் வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 நாட்டுத் துப்பாக்கிகள், கத்திகள் உள்பட மொத்தம் 1,117 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments