மும்பையை நவி மும்பையுடன் இணைக்க 18 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய கடல் பாலம்

0 4675

மும்பையில் இருந்து நவி மும்பைக்கு 20 நிமிடங்களில் செல்ல கடல் மீது மிகப்பெரிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

21 கிலோமீட்டர் தூரத்துக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த பாலம், இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல் பாலம் என்று கருதப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு இது கட்டி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான பணிகள் மிகவேகமாக நடைபெற்று வருகின்றன.

கட்டுமானத்துறையில் இது போன்ற மிகப்பெரிய கடல் பாலம் கட்டப்பட்டதே இல்லை என்பதால் மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் மெட்ரோ ரயில் போக்குவரத்து பேருந்து சேவை போன்றவை தொடங்கவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments