பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் - விஏஓ கைது

0 4759
பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் - விஏஓ கைது

திருவள்ளூர் அருகே பட்டா மாற்றம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தனது தந்தை பெயரில் உள்ள சொத்தின் பட்டாவை தனது பெயரில் மாற்றம் செய்வதற்காக திருப்பாச்சூர் கிராம நிர்வாக அலுவலர் திருமாலை அணுகியபோது, அவர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிலம்பரசன் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவித்தார். இந்நிலையில், சிலம்பரசனிடம் இருந்து ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்ற திருமாலை, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments