கன்னியாகுமரியில் மலை போல் குவித்து வைக்கப்பட்ட மீன்கள்.. விலை குறைவால் மீன்களை வாங்கிச் செல்ல வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வம்..!

0 20954

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள மீன்களை வாங்க வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்தனர்.

மீன் பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் நேற்று மாலை குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பிய நிலையில், அவற்றில் கொண்டுவரப்பட்ட அதிக அளவிலான கொழிசாளை, கிளாத்தி உள்ளிட்ட மீன் வகைகள் துறைமுக ஏல கூடத்தில் மலை போல் குவிக்கப்பட்டன. அதிக மீன் வரத்தால், விலை குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கிலோ 80 ரூபாய் வரை விலை போகும் கொழிசாளை 19-ரூபாய்க்கும், கிலோ 50 ரூபாய் வரை விலை போகும் கிளாத்தி மீன் 13 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

மேலும் ஒரு ராட்சத சுறா மற்றும் திருக்கை மீன் சேர்ந்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments