ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொலை

0 2155

ஜம்மு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

சோபியன் மாவட்டம் கஸ்வா என்னுமிடத்தில் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய பயங்கரவாதி அனாயத் அஷ்ரப் தர் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தார். இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், ராணுவத்தினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று அப்பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சரணடைந்து விடும்படி விடுத்த வேண்டுகோளை ஏற்காததால் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் பயங்கரவாதி உயிரிழந்தான். அவனிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கியும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments